இலங்கை

பரிசோதனைக்குட்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் சமிக்ஞை கட்டமைப்புகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களினதும் சமிக்ஞை கட்டமைப்புகள் விசேடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து களுத்துறை வரையான ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் இன்றும் நாளையும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், பாணந்துறையிலிருந்து மொரட்டுவ வரையிலான ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்புகள் சீராக உள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மற்றும் எகொட உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் நேற்று முற்பகல் இடைநடுவே நிறுத்தப்பட்டது.

எனினும் சமிக்ஞை கோளாறு காரணமாகக் கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மற்றுமொரு ரயிலே அதே மார்க்கத்தில் பயணித்தது.

பின்னர் அதன் இயக்குநரின் உடனடி நடவடிக்கையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டதுடன் ஏற்படவிருந்த விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள சகல ரயில் மார்க்கத்திலும் காணப்படும் சமிக்ஞை கட்டமைப்புகளைப் பரிசோதனைக்குட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…