சினிமா

படப்பிடிப்புக்கு சென்ற மாடலிங் பிரபலம் சடலமாக மீட்பு

இந்தியாவின் அரியானாவின் சோனிபட் அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலுமான இருந்து வந்த ஷீத்தல் என்ற இளம் பெண் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14 அன்று படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்குச் சென்ற ஷீத்தல் வீடு திரும்பாததால், அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில், காண்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலையின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…