பெந்தோட்டையில் 5 கிலோ 105 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது!

பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், பெருமளவு ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது 5 கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடைய பெந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version