குருநகர் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார். 

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version