ஆரம்பித்து ஒரே வாரத்தில் அறுந்து விழுந்த கேபிள் கார் ; 4 பேர் பலி

இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் விசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் காயமடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version