ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி இந்நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குரித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Exit mobile version