கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், பட்டமளிப்பு விழாக்கள் “மாணவர் மையமாகவும், அரசியல் சார்பில்லாததாகவும், உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” என்று கல்வி அமைச்சர் போல் கலான்ட்ரா பள்ளிக் குழுக்களுக்கு அனுப்பிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து கனடிய சிவில் உரிமைகள் ஒன்றியம் கடும் கவலை வெளியிட்டுள்ளது.
“பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கிய நிகழ்வு. அது முழுமையாக அதற்கே அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று கலாண்ட்ரா தெரிவித்தார்.
