பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி!

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரந்தூக்கியின் உதவியுடன் பஸ் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,பஸ்ஸில் இருந்து 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (25) நள்ளிரவு இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து, ஆற்றில் இருந்து மேலும் 2 பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கிப் பயணித்த இந்தப் பஸ்ஸில் சிறுவர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version