யாழ்ப்பாணம் சுழிபுரம், தொல்புரம் பகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 

நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபரை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version