பாதாள உலக இணைப்புடன் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கரன்தெனிய சுத்தா என்பவரின் சகோதரர் இந்தியாவில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக கொலைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் பதுங்கியிருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாட்டுக்கு அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version