கனடாவில் ஒன்லைன் வாயிலாக அதிகரித்துவரும் இனவெறுப்பு

கனடாவில் இணையவழி இனவெறுப்பு அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கனடாவில் பெண்கள், சிறுபான்மையினர் முதலானோருக்கு எதிரான இணையவழி அல்லது ஒன்லைன் வெறுப்புப் பேச்சின் அளவு அதிகரித்து வருவதை விவரிக்கும் ஒரு அறிக்கையை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

உதாரணமாக, 2.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டதும், தவறான தகவல்கள், இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பியதற்காக விமர்சிக்கப்பட்டதுமான 6ixBuzz என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு, ஆசிய எதிர்ப்பு, சீக்கிய எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு சார்புகளைப் பரப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்திகள், கனடாவின் அரசாங்கக் கொள்கையையும், கனடாவில் பல தசாப்தங்களாக சமூகத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படாததையும் சுட்டிக் காட்டுவதற்கு பதிலாக, அரசாங்கங்களின் பொருளாதாரத் தோல்விகள் மற்றும் உலகளாவிய நவீன தாராளவாத ஒழுங்கிற்கான பழியை, சிறுபான்மை சமூகங்கள் மீது சுமத்துகின்றன என்கிறது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை.

இணையத்தளத்தில் நிகழும் வெறுப்புக் குற்றங்கள் கனேடிய அரசாங்கத்தால் பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள மசோதா C 63, இணையவழி வெறுப்புப் பேச்சுக்குக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துகிறது. 

Exit mobile version