மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: யாருக்கு பாதிப்பு? முழு விபரம் உள்ளே!

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


நாளை (11) முதல் இந்த கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ள போதிலும், இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


2026-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது, 8% முதல் 14.4% வரையிலான மின்சாரக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.


இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ‘தேசிய கட்டமைப்பு இயக்கு நிறுவனம்’  திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.


எவ்வாறாயினும், மின்சாரக் கட்டண அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் உடன்பட்டுள்ளது. இதன்படி, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பானது நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்குப் பொருந்தாது.


அதாவது, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.


ஆனால், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன:

Exit mobile version