மருத்துவமனையில் இரகசிய கமராக்களை பொருத்திய பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
தமது மருத்துவமனையில் நோயாளிகள் உடைகளை மாற்றும் “மிகவும் ரகசியமான இடங்கள்” உட்பட பல இடங்களில், அவர்களின் அனுமதியின்றி இருபதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கமராக்களை பொருத்தி தனியுரிமையை மீறிய குற்றச்சாட்டில், டொரண்டோவைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவருக்கே இவ்வாறு 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகத் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
