தென்னாபிரிக்காவில் கனடியருக்கு ஏற்பட்ட பெருந்துயரம்

தென்னாப்பிரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கிருகர் தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 69 வயதான கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்தாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூங்காவின் வழிகாட்டி வைத்திருந்த துப்பாக்கி உண்மையானதா இல்லையா என்று குறித்த கனடியப் பயணி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

Exit mobile version