மொண்ட்ரியால் நகரில் உள்ள சாக்ரே கோயூர் மருத்துவமனையில் சுமார் 40,000 டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே 2 ஆம் திகதி காலை 9:45 மணியளவில் பெண் ஒருவர் மொண்ட்ரியால் காவல் நிலையத்திற்குச் சென்று, அன்று அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்ததாகப் புகார் அளித்துள்ளார்.
மருத்துவமனையின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த பல மருத்துவ உபகரணங்களைத் திருடிச் சென்றதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
