கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகா நகரில் இடம்பெற்ற போலி வாடகை வீடு மோசடியில் 8 பேர் மொத்தம் 30,000 டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பீல் பிராந்திய பொலிஸார் இதில் தொடர்புடைய இரு சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், சஸ்காட்செவன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிசிசாகா நகரில் வீடுகள் வாடகைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்.
வாடகைக்கு வீடு தேடிய நபர்கள் அந்த வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
