கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
