கனடாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

சென் மார்கிரட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் சிட்னி கேபிள் என்பவர், கடந்த ஜூலை 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறியது தவிர, துப்பாக்கி தொடர்பான பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் தேடப்பட்டு வருகிறார்.

Exit mobile version