மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Home
- மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்
By me24tamil 2 hours ago -
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
By me24tamil 2 hours ago -
விடுதி ஊழியர் மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை
By me24tamil 2 hours ago -
தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்
By me24tamil 2 hours ago -
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் என தீர்ப்பு
By me24tamil 2 hours ago -
மட்டக்குளி விபத்து - காரின் சாரதிக்கு விளக்கமறியல்
By me24tamil 2 hours ago