கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.

Exit mobile version