சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு பிறிதொரு கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.