தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை தொடர்பான கோரிக்கையினை பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமும், சபாநாயகரிடத்திலும் கடந்த மாதம் 23ம் திகதி தாம் முன்வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையாக முன்வைக்கப்பட்டு அன்றைய தினம் பாராளுமன்றில் முழுநாள் விவாதமாக இடம்பெறும்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, நிலஅபகரிப்புக்கு எதிர்ப்பு , மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடயங்களை அன்றைய தினம் சபையில் வலியுறுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.
