உலகம்

ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி

இந்​தியா உட்பட வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு ஒக்​டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

ஏற்​கெனவே இந்​தி​யப் பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மருந்​துப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​பட்டிருப்பது அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த தாக்​குதலாக பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார். அவர் பதவி​யேற்​றது முதல், பல்​வேறு நாடு​கள் மீது சரமாரி​யாக இறக்​குமதி வரி விதிப்பை அறி​வித்து வரு​கிறார். இந்​தி​யா, சீனா உட்பட பல்​வேறு நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு கூடு​தல் வரியை​யும் அவர் அறி​வித்​தார்.

முதலில் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்​வதை நிறுத்த வேண்​டும் என்​றும் அறி​வித்​தார். இந்​தியா அதை ஏற்காத​தால், கூடு​தலாக 25 சதவீத வரியை இந்​தியா மீது விதித்​தார். இதனால், இறக்​குமதி செய்​யப்​படும் இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்​கா​வில் 50 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இதனால், இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

பேச்​சு​வார்த்தை தீவிரம்: இதற்​கிடையே, வர்த்​தகம் தொடர்​பாக அமெரிக்க அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்​றுள்​ளார்.

அவருடன் வர்த்​தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்​வால் உள்​ளிட்ட மூத்த அதி​காரி​களும் சென்​றுள்​ளனர். அமெரிக்க அரசின் வர்த்​தகத் துறை அமைச்​சருடன், மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளார். தொடர்ந்து வர்த்​தகம் மற்​றும் வர்த்​தகம் சாராத விவ​காரங்​கள் குறித்து பல்​வேறு கட்​டங்​களாக பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்டு வரு​வ​தாக மத்​திய அரசு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பேச்​சு​வார்த்​தையை முடித்​து​விட்டு மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான குழு​வினர் இந்த வார இறு​தி​யில் இந்​தியா திரும்ப உள்​ளனர். கடந்த 4 ஆண்​டு​களாக இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்​டணி நாடாக அமெரிக்கா இருந்து வரு​கிறது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…