No products in the cart.
போராடி தோற்றது இலங்கை அணி!
இன்று நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.
3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சுப்பர் ஓவரில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது