இலங்கை

கிரிக்கெட் போட்டியின் போது விபரீதம் – ஒருவர் பலி

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய, பளுகஹவெல, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…