இலங்கை

பாணந்துறையில் இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்றிரவு (08) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்த குறித்த இளைஞர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பணத்தகராறு முற்றியமையினால் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 54 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…