No products in the cart.
கம்பளையில் வெள்ளத்தால் பெருமளவான உணவுப் பொருட்கள் நாசம்
திட்வா புயலுடன் கம்பளை நகரை பாதித்த வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மேலதிகமாக, கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன.
இதற்கமைய, கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு அழிவடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு மேலதிகமாக பருப்பு, சீனி, மா முதலானவையும் அவற்றில் அடங்குகின்றன.
கம்பளை – நாவலப்பிட்டி வீதியில், கஹட்டபிட்டிய மற்றும் போதலாபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகள் மற்றும் சிறப்பங்காடி வளாகங்களிலேயே இந்த உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.














