இலங்கை

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை

2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டியுள்ளோம்.

இந்த ஆண்டில் நாங்கள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைய இலக்கு வைத்துள்ளோம்.

மேலும் 5 பில்லியன் டொலர் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளோம். அது ஒரு சவாலான எண்ணிக்கையாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்த போதும், பின்னர் அது 2.4 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் சூறாவளி தாக்கம் இருந்தபோதிலும், டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வருகை அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…