இலங்கை

கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: பெண் படுகொலை

நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். 

நேற்று (28) பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த பெண் 40 வயதுடைய ரதலியத்த, பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

உயிரிழந்த பெண்மணிக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, தற்போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

சந்தேகநபரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…