இலங்கை

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…