இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது. 

ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சினால் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். 

அவசர காலங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் அனுப்பப்படும் என்றும், சைரன் ஒலிகள் கேட்டால் தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தூதரகம் இன்று (31) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும் என்றும், இக்காலப்பகுதியில் வழமையான தூதரகப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…