இலங்கை

பேராயர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக ‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான நீர் வழிந்தோடும் முறைமை முத்துராஜவெல ஈரநிலத்தின் ஊடாக அமைந்துள்ளதால், அங்கு தொடர்ந்தும் அத்துமீறிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் மீண்டும் கம்பஹா மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமைகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார். 

முத்துராஜவெல ஈரநில வலயத்தினுள் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் அவ்வலயத்தைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. 

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…