இலங்கை

சிறுவனின் உயிரைப் பறித்த விபத்து

உடவளவ – தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் நடந்து சென்ற ஒரு சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடவளவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…