இலங்கை

ராஜஸ்தான் அணியின் புதிய தலைவர் யார்?

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சஞ்சு சம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இரண்டு பேர் சென்னை அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டிருந்தனர். 

24 வயதான பராக் ஏற்கனவே ராஜஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவராவார். 

கடந்த ஆண்டு சஞ்சு சம்சன் காயத்தினால் எட்டு போட்டிகளில் விளையாடாதபோது, பராக் அணியை வழிநடத்தியிருந்தார். 

அந்த 8 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது. 

இருப்பினும், தலைவராக பராக் 38.57 என்ற சிறந்த சராசரியைக் கொண்டிருந்தார். 

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் 95 ஓட்டங்களை எடுத்தமையே அவரது ஐபிஎல் வாழ்க்கையின் சிறந்த ஓட்ட பரிதியாக காணப்படுகின்றது. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணி தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் மாற்றத்துடன் இம்முறை களமிறங்கவுள்ளது. 

அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ராகுல் ட்ராவிட் விலகியதை அடுத்து, குமார சங்கக்கார ராஜஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…