இலங்கை

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. 

இதன்படி, இன்று (21) முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று (20) அதன் விலை 362,600 ரூபாவாகக் காணப்பட்டது. 

இதேவேளை, வெள்ளிக்கிழமை 392,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…