இலங்கை

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

UPDATE – 6.15 PM   மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

WhatsApp / Imo: +94 71 980 2822

அவசர அழைப்பு (Hotline): 1989

—————————————————————————————————————————————————————————————————————–

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரையில் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக, அங்கிருக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.​ை 

பஹ்ரைனில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது ஆபத்தோ ஏற்படவில்லை என அந்த அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

இதேவேளை, அவசரத் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிப்பதற்கான விசேட அவசரத் தொலைபேசி இலக்கங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த இலக்கங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…