இலங்கை

எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் விடுதலை!


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

நேற்று (31) இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 25 மீனவர்களுக்கும் எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மீனவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…