இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு

நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

பாதுக்க: இன்று (02) இரவு 8.00 மணி – நாளை (03) இரவு 8.00 மணி வரை

ஹோமாகம: நாளை (03) இரவு 8.00 மணி- ஏப். 04 இரவு 8.00 மணி வரை

பெலன்வத்த: ஏப். 04 ஆம் திகதி இரவு 8.00 மணி – ஏப். 05 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை

நீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்கள் குறித்து அந்தந்தப் பகுதி நுகர்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நீர் விநியோகம் முழுமையாகத் தடைப்படும் என்பதால், நுகர்வோர் தங்களுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…