No products in the cart.
விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக கனேடியர்கள் மேற்கொள்ளும் உத்தி
விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக கனேடியர்கள் பலர் தள்ளுபடிக் கடைகளை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில், காலாவதி திகதி பார்த்து பொருட்கள் வாங்கும் நாட்டு மக்களில் கனேடியர்களை சேர்க்காமல் இருக்கமுடியாது.
அதாவது, விலைவாசி உயர்வால், எந்த பொருட்கள், குறிப்பாக மளிகைப்பொருட்கள் விலை குறைவாகக் கிடைக்கும் என பார்த்து வாங்கத் துவங்கியுள்ளார்கள் கனேடியர்கள்.
கனடாவில், Liquidation Marie போன்ற தள்ளுபடிக் கடைகளில் 50 சதவிகிதம் வரை குறைவான விலையில் மளிகைப்பொருட்கள் கிடைக்கின்றன.
ஆகவே, அத்தகைய தள்ளுபடிக் கடைகளை நாடும் கனேடியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதற்கேற்ப கனடாவின் பல இடங்களில் தள்ளுபடிக் கடைகளின் கிளைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.















