இலங்கை

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வீடு மீது மோதிய விமானம் ; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இருவர்

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சுமார் 4 மணியளவில் புறப்பட்ட அந்த விமானத்தில் இரண்டு பேர் பயணித்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அக்ரான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பற்றி எரிந்ததாகவும், இதில் விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…