இலங்கை

லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (20) காலை கட்டகடுவ பகுதியில் வீதித் தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த லொறி வீதித் தடையையும் மீறி தப்பிச் சென்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற போதிலும், அது நிறுத்தப்படாமல் பயணித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியில் இருந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…