இலங்கை

அதிகூடிய மழை வீழ்ச்சி நுவரெலியாவில் பதிவு

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெலிஸ்ஸகல, ஹுனுகல் ஓயா ஆகிய பகுதிகளிலேயே இந்த 118.80 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நுவரெலியாவின் வட்டவளை பகுதியில் (82 மி.மீ), கேகாலையில் (70 மி.மீ) மற்றும் இரத்தினபுரியின் எரத்த பகுதியில் (62 மி.மீ) ஆகிய இடங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…