உலகம்

தென் ஆப்பிரிக்கா – செக்குடியரசு இடையிலான ஆட்டம் சமநிலை

உலகக் கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், குரூப்-எ பிரிவில் இடம்பெற்றுள்ள செக்குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. 

அட்லான்டா மைதானத்தில் நடந்த போட்டியின் 6-வது நிமிடத்திலேயே செக்குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது. 

செக் குடியரசு அணியின் மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார். 

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தின் முதல் பாதி வரை செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. 

இதன் பலனாக 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. 

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன. 

ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின. 

இதனால் இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…