இலங்கை

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட – எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக, சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு முப்பது (30) மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.இந்தப் பாலம் 60 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சஞ்சீவ கொடெல்லவத்த, திட்டமிடல் பணிப்பாளர் ருவன் பிரேமரத்ன, நிர்வாக பொறியியலாளர் சமன் வேரஹெர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…