உலகம்

ட்ரம்பின் உத்தரவுக்கு வலுக்கும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் மீது விதித்த தடையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டித்துள்ளது.

அதிபர் ட்ரம்பின் முடிவு மிகவும் கொடூரமானது மற்றும் இனவெறி கொண்டது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

தேசியத்தின் அடிப்படையில் தனிநபர்களைக் குறிவைத்து இதுபோன்ற தடையை விதிப்பது ஒரு வகையான வெறுப்பு என்று “Human Rights First” என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில், ஆப்கானிஸ்தான், மியன்மார், ஈரான், சோமாலியா, சூடான் உள்ளிட்ட 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான நிர்வாக உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

உக்ரைன் ரஷ்யா போரை பயன்படுத்தி நன்மையடைந்த அமெரிக்கா!

அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க…