இலங்கை

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இவ்வாறு தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மலையக ரயில் மார்க்கத்தின் பயண நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளை பேருந்துகள் மூலம் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது தடம்புரண்ட ரயிலை மீண்டும் தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு மேலும் சில மணித்தியாலங்கள் ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…