இலங்கை

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…