கனடா

கனடாவில் நியுமோனியா நோயாளிகள் வெகுவாக அதிகரிப்பு

கனடாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியுமோனியாவுக்காக அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் சென்ற நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என கனடிய சுகாதார தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது 5 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என ஆய்வு கூறுகிறது.

கோவிட் தொற்றுக்குப் பின்னர் நியுமோனியாவுக்கான அவசர சிகிச்சை வருகைகள் இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.

2023-24 காலப் பகுதியில் மக்களை தாக்கிய முதல் பத்து நோய்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் 2024-25ல் வயிற்று வலி, தொண்டை/மார்பு வலிக்கு அடுத்ததாக நியுமோனியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மிகவும் லெசான அறிகுறிகளுடன் நியுமோனியா காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது பொதுவாக இருமல், காய்ச்சல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

பலர் தானாகவே குணமடைகிறார்கள்; ஆனால் சிலருக்கு நரம்பியல் பிரச்சினைகள், தோல் பொடுகுகள் போன்ற தீவிர விளைவுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு நீடித்த இருமல், காய்ச்சல், சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…