உலகம்

எண்ணெய் கொள்முதல் விவகாரம் ; அமெரிக்காவிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை

ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாக அதிகாரி ஒருவர் கூறியதாக ப்ளும்பெர்க்கில் குறிப்பிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ரஷியா, ஈரான், வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அனைத்து முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் உலகளாவிய விலையில் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும் என்று இந்திய பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…