இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட் சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 33 கிலோகிராம் 270 கிராம் ஏஸ், 408 கிராம் ஹெரோயின், 200 போதைப்பொருள் மற்றும் 7,400 ஹெரோயின் (சரஸ்) துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மட்டக்குளிய, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது. 

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…